பிறந்தநாள் வாழ்த்துக்கள் தன்வந்த் செல்லம்
என் தேவதையின் பெயர் மதி !
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தன்வந்த் செல்லம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , தனஞ்ஜெய் செல்லம்
கதை சொல்லி
காலம்
ஒரு கதை சொல்லி
சிறுகதையாய் , நெடும் தொடராய்
முடிவின்றி தொடரும் கதைகளாய் !!
ஆணவ மனிதன்
அடங்கிய காலங்களில்
ஆகாரம் வேண்டிய தவிப்பும் கதைகளாய்!
தொலைந்த நட்பும்
தொலைத்த உறவுகளும்
காரணங்கள் தேடி தொடரும் கதைகளாய் !
இறைத்த சோளிகளின் எண்ணிக்கை
பரமபத்தின் கட்டங்களில்
காத்திருக்கிறது சிதறிய சிறுகதைகளாய் !
தாண்டிய நொடிகளும்
தொடரும் நிமிடங்களும்
திறக்காத பக்கங்களின் வழியாய்
காத்திருக்கிறது கதைகளுடன் !!
தையதக்க தையதக்கா
சந்சோச கூச்சலிட
தங்க மகன் பிறந்தான்!
பிள்ளைக்காக கலங்கிய காலங்கள்
மழைக்கால மேகங்களாய் கரைய
தேவனாய் பிறந்து வந்தான் !
கண் பட்டுவிடுமோயென
உன் தாலட்டுகளை
மௌனமாய் இசைத்தோமடா !
இனி
பால் வாசம் வீசும் தலையணைகளும்
சிறுநீரால் நனைந்த
படுக்கை விரிப்புகளும்
முகமெங்கும் நனைத்திடும் முத்தங்களும்
சி்ன்னஞ்சிறு செய்கையில்
நெகிழ்ந்து நீளும் நிமிடங்களும்
எங்களுக்கும் சொந்தமாகும் செல்லமே!
எந்திர வாழ்க்கையின்
மனித படிமங்களுக்கு மத்தியில்
எங்களிருவரின்
ஒற்றை உலகம் நீயடா
உனக்காக உறங்காத இரவுகளில்
ஆனந்த கண்ணன் நீயுறங்க
எங்களின் வாழ்க்கை கதைகள் தாலாட்டாய்
உன் விரல் ரேகையில்
எங்களின் வாழ்க்கை பயணம்
உந்தன் புன்சிரிப்பில்
எங்களின் உயிர் சிரிப்பு
சின்னஞ்சிறு ஆசைகளை
தர மறுத்த இறைவன்
சந்தோச பொக்கிஷத்தை
உள்ளங்கையில் தந்துவிட்டு
என்ன பெயரென சிரித்தான்
நன்றியும் கர்வமுமாய் சொன்னோம்
தனஞ்ஜெய் எனும் ஜித்து என...

நிலாப்பெண்ணின் விசும்பல்களில்
மொட்டை மாடி கவிதைகள்
வானம் பார்த்தபடி வெறுமையாய்
கனவுப்பெண்ணின் கண்ணீரில்
இரவுத் தூக்கங்கள்
கனவுகள் இன்றி மரணமாய்
மனம் பிழியும் சுமைகளாய்
என் கவிதைகள் கணக்கிறது
தாள்களை எறித்துவிடுகிறேன்
யாராவது கவிதைகளை
எடுத்து தொலைத்துவிடுங்களேன்
பெண்மையை காயப்பட்ட பொழுதுகளிலும்
எனை இமைக்குள் இருத்தியவளே
தேவதைகளின் கண்ணீர் துளிகள்
பூமிக்கு சாபங்களாம்
சபிக்கப்பட்டவனாய் நானும் தோழி ...
அப்பத்திரிக்கையின்
முதல் பக்கத்தில் நடிகன்
நடுப்பக்கத்தில்
நடிகையின் தொப்புள் தரிசனம்
இடைஇடையே- கிரிக்கெட்டின்
சில வெற்றிகளும் , பல தோல்விகளும்
சமையல் குறிப்புகள்
நகைச்சுவை படத் தோரணங்கள்
வாங்கிவிட்டீர்களா
கூவி அழைக்கும் விளம்பரங்கள்
மிக முக்கியமாய்
அரசியல் கோமாளி அறிக்கைகள்
போனால் போகட்டும்மென
கடைசி பக்க ஓரங்களில்
" இலங்கை அகதி வாழ்க்கை" என
பக்கம் நிரப்பும் கட்டுரை ..
இறக்கை கட்டிப்பறக்கும்
நம் அலுவல் நேரத்தில்
வள்ளுவன்,வாசுகியாய்
நாமென்றும் இல்லை
கிளம்பும் நேரத்தில் சண்டைகளுடன் நானும்
திரும்பும் நேரத்தில் சோர்வாய் நீயும்
வார விடுமுறை நாட்களும்
துணிகள் துவைத்தும்
விட்டு போனவைகளை முடித்தும்
தொடங்கி விடுகிறது திங்கட்கிழமையாய்
இடையே எப்பொழுதாவது
அலைபேசியில் சத்தமிடும்
உன் "ஐ லவ் யு" குறுஞ்செய்திகள் தான்
இன்னும் உயிர்ப்பிக்கிறது
என்னையும் ! நம் காதலையும்...
மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.திருமண சந்தோசம்,அலுவலக வேலை மற்றும் புதுவீட்டில் இண்டர்நெட் கனெக்ஷன் எடுப்பதற்கு சற்று காலதாமதம் போன்ற காரணத்தால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை.
அலுவலகத்தில் சில பிளாக் சைட் மட்டும் பார்க்க முடியும் ஆனால் கமெண்ட்ஸ் போட முடியாது. மன்னிக்கவும்.இனி என்னால் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் அத்தனை தோழமைகளுடனும் தொடர்ந்து பயணிப்பதற்கு.

கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி/09 இரு வீட்டார் சம்மதத்துடன் உறவுகளின்,நட்புகளின் வாழ்த்துக்களுடன் என் தேவதையின் கரம் பிடித்தேன் இறைவனுக்கு நன்றிகள் பல. 6வருடங்களாய் காத்திருந்த எங்களின் காதல் வெற்றியாய் திருமணம் நடந்தது.
சின்ன சின்ன மனக்கசப்புகள்,ஆராவாரம்,பயங்கள் இருந்ததால் நீண்ட நாட்களாக எதுவும் செய்ய இயலவில்லை.பிளாக் பக்கமும் வரமுடியவில்லை.காத்திருந்த,எதிர்பார்த்த தோழமைகளுக்கு நன்றிகள் பல.
நன்றியை நேரில் சொன்னால் உறவுகள் உரிமையாய் கோபித்து கொள்வார்கள்.அதற்காகவே இங்கே இந்த பதிவிடுகிறேன். திருமணத்தை நடத்தி வைத்த ,தோள் கொடுத்த வீட்டு உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும்,சந்தோச கண்ணீர் துளிகளையும் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
தலைப்பில்லாத கவிதையாய்
நீயும் நானும் இங்கே
அங்கீகாரம் இல்லாததாலயே
அலைக்கழிப்பாய் நம் காதல்
யார் யாரிடமோ
அங்கீகாரம் கேட்டபடி
திசை தெரியா பறவைகளாய்
காத்து நிற்கும் தருணங்களில்
நம் காதலும்
வெட்கப்பட்டதடி அவமானத்தால்
என்னதான்
எதிர்பார்ப்புகள் இவர்களுக்கு என
கேள்விகள் கேட்பவளே
அது தெரியாமல் தானே
குருட்டு மனிதன்
ஓவியம் வாங்கும் அவலமாய்
உன்னோடு நானும்
சத்தமின்றி
முத்தமிட்டு சென்றவளே
சத்தமாய்
உறவுகளிடம் பேசாததுதான் தவறோ
மழலையாய்
நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்
நீண்ட இரவுகளில்
கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்
கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயாராய்...
Copyright © 2011 - ஜீவா - Using Blogger
Illacrimo - Design by Design Disease
- Blogger Templates by Blog and Web