கதை  சொல்லி 


காலம் 

ஒரு கதை சொல்லி 

சிறுகதையாய் , நெடும் தொடராய் 

முடிவின்றி தொடரும் கதைகளாய் !!

ஆணவ மனிதன் 

அடங்கிய காலங்களில் 

ஆகாரம் வேண்டிய தவிப்பும் கதைகளாய்!

தொலைந்த நட்பும் 

தொலைத்த உறவுகளும் 

காரணங்கள் தேடி தொடரும் கதைகளாய் !

இறைத்த சோளிகளின் எண்ணிக்கை 

பரமபத்தின் கட்டங்களில் 

காத்திருக்கிறது சிதறிய சிறுகதைகளாய் !

தாண்டிய நொடிகளும் 

தொடரும் நிமிடங்களும் 

திறக்காத பக்கங்களின் வழியாய் 

காத்திருக்கிறது கதைகளுடன் !!

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: